மைத்திரிக்கு வேட்புமனு.-மொட்டில் கடும் எதிர்ப்பு!
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு மொட்டு சின்னத்தின் கீழ் எக்காரணம் கொண்டும் வேட்புமனு வழங்கக்கூடாது என பொதுஜன பெரமுனவின் எம்பிக்கள் சிலர் கட்சி தலைமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் பூர்த்தியாகும் நேரத்தில் பொது தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் மைத்ரிபால சிறிசேனவுடன் ஒரே மேடையில் இணைவது தற்கொலைசெய்வதை போல காரியமாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தாக்குதலுக்கு முன்னர் அது தொடர்பாக விடுத்த எச்சரிக்கை தொடர்பாக முழுமையாக தெரிந்திருந்த நிலையில் அதை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்களினால் கட்சி தலைமைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் வழங்கிய சாட்சியத்திற்கு அமைய நிலைமை இதை விட கடும் நெருக்கடியை உருவாக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய ஏப்ரல் 25ம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுடன் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதாயின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வாய்திறக்க இயலாது என்பதுடன் அதன் பொறுப்பை முழுமையாக எமது தோளில் சுமக்க நேரிடும் எனவும் அவர்கள் கடுமையாக தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணியமைத்துக்கொண்டால் மைத்ரிபால சிறிசேனவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க இயலாது என முன்கூட்டியே அறிவிக்குமாறு குறித்த எம்பிக்கள் சிலர் கட்சி தலைமைத்துவத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம்பெற்று ஒருவருடம் பூர்த்தியாகும் நேரத்தில் பொது தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் மைத்ரிபால சிறிசேனவுடன் ஒரே மேடையில் இணைவது தற்கொலைசெய்வதை போல காரியமாகும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தாக்குதலுக்கு முன்னர் அது தொடர்பாக விடுத்த எச்சரிக்கை தொடர்பாக முழுமையாக தெரிந்திருந்த நிலையில் அதை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர்களினால் கட்சி தலைமைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல் தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் வழங்கிய சாட்சியத்திற்கு அமைய நிலைமை இதை விட கடும் நெருக்கடியை உருவாக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய ஏப்ரல் 25ம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுடன் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதாயின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வாய்திறக்க இயலாது என்பதுடன் அதன் பொறுப்பை முழுமையாக எமது தோளில் சுமக்க நேரிடும் எனவும் அவர்கள் கடுமையாக தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணியமைத்துக்கொண்டால் மைத்ரிபால சிறிசேனவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க இயலாது என முன்கூட்டியே அறிவிக்குமாறு குறித்த எம்பிக்கள் சிலர் கட்சி தலைமைத்துவத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo