ரிஷாத்தின் சகோதரர் பிணையில் விடுவிப்பு!!

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் ரிஷாத்தின் சகோதரருமான ரிப்கான் பதியுதீன், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


கடந்த மாதம் 22ஆம் திகதி தனது சட்டத்தரணியுடன் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலானாய்வு திணைக்களத்துக்கு விசாரணைக்கு சென்ற நிலையில் அவர் கைதுதாகியிருந்தார்.

அதனையடுத்து, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை போலி உறுதிப்பத்திரத்தைத் தயாரித்து தலைமன்னார் பகுதியில் 2 காணிகளை விற்பனை செய்த மோசடி குற்றச்சாட்டில் ரிக்ஷாத்தின் சகோதரர் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.