இருவேறு பாரிய போராட்டங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்!!

கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இருவேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


அதற்கமைய இராணுவ வீரர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய சக்தி அமைப்பினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யுத்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடைய முப்படையினர், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சம்பளத்திற்கு நிகரான தொகை வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற விசேட தேவையுடைய இராணுவத்தினர் மற்றும் அவர்களது மனைவிமார்கள் குழு ரயில் நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது குறித்த போராட்டக் குழுவினருடன் ஜனாதிபதி செயலக குழுவொன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து தொழில்வாய்ப்பை இழந்த குழுவினரும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த குழுவில் உள்ள சிலரும் சிறிது நேரத்திற்கு முன்பு பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு உள்ளே சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.