அநாகரிகமாக பதில் கொடுத்த ஆறுமுகன் தொண்டமான்!!

தோட்டத் தொழிலாளா்களுக்கு தை மாதம் வழங்கப்படும் என கூறப்பட்ட 1000 ரூபாய் சம்பள உயா்வு உண்மையில் எப்போது வழங்கப்படும். என கேள்வி எழுப்பிய ஊடகவியலாளா்களிடம் மலையக தோ ட்ட தொழிலாளா்களின் கோவணத்தையும் உருவிய ஆறுமுகம் தொண்டமான் ஆவேசமடைந்தாா்.


சிறிலங்காவின் சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சா் ஆறுமுகம் தொண்டமான் நேற்று யாழ்.குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் பல்கலைகழக மாணவா்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கியிருந்தாா். இந்நிகழ்வில்

மலையக மக்களின் கோாிக்கையான 1000 ரூபாய் சம்பள உயா்வு தை மாதம் வழங்கப்படும் என கூறப் பட்டபோதும் அது வழங்கப்படவில்லை. எனவே அது எப்போது வழங்கப்படும். என ஊடகவியலாளா் கள் கேள்வி எழுப்பிய நிலையில்,

அதற்குப் பதிலளித்த அமைச்சர் அவ்வாறு தைப்பொங்கலுக்கு முன்னர் கிடைக்குமென்று நான் சொல்லவில்லை என்றும் நான் சொல்லுறதைக் கேளு. நீயா பேசிட்டு இருந்தா நான் எப்படி என்று ஒருமையில் பேசினார். மேலும் தைபிறந்தால் வழி பிறக்கும் என்று தான் நான் சொல்லியிருந்தேன்.

தை பிறந்த அன்று ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்ச ஆயிரம் ருபா கொடுப்பனவு கொடுக்கப்படு ம் என்று தெரிவித்திருந்தார். ஆகையினால் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கட்டாயம் கிடைக்கும் என்று பதிலளித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.