ஜப்பானின் தகனாமி கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!!

ஜப்பான் கடற்படைக்கு சொந்தமான தகனாமி கப்பல், கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.


இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவிற்கு வலுசேர்க்கும் நிமித்தம் குறித்த கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வருகைத் தந்துள்ள குறித்த கப்பலை சம்பிரதாய பூர்வமாக இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த கப்பலின் கட்டளைத் தளபதி யுசி நிஹாரா உள்ளிட்டஅதிகாரிகள் குழு, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவினருடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.