சட்டவிரோத மண் அகழ்வு - மூவர் கைது!!

வவுணதீவு பொலிஸ் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சட்டதிட்டங்களை மீறி மண் அகழ்வில் ஈடுபட்ட பெக்கோ இயந்திரம் உள்ளிட்ட இரண்டு கென்டர் ரக வாகனங்களையும் அதில் இருந்த மூவரையும் தாண்டியடி விஷேட அதிரடிப்படையினர் கைதுசெய்து வவுணதீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


 மற்றுமொரு சம்பவத்தில் வவுணதீவு பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் அனுமதிப் பத்திரம் இல்லாது மண் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தையும் அதிலிருந்த ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களையும் குறித்த நான்கு வாகனங்களையும் இன்று திங்கட்கிழமை (24.02.2020) மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.