இன்றும் ரிஷாட் மனைவியிடம் சிஐடி விசாரணை!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் நேற்றையதினம் குற்றப்புலனாய்வு பிரிவு நான்கரை மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.


விசாரணைக்காக அவர் நேற்று முற்பகல் 11 மணிக்கு குற்றப்புலனாய்வுக்கு சென்றார்.

அதன்பின்னர் சுமார் நான்கரை மணிநேரம் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் அவர் மாலை 3.30 அளவில் அங்கிருந்து வெளியேறினார்.

இதன்போது அவரிடம் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் சதொச பல்பொருள் அங்காடிக்காக கொள்வனவு செய்யப்பட்ட மின் பிறப்பாக்கிகளுக்கான கொடுக்கல் வாங்கலில் மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் இன்றும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.