சிரேஷ்ட பாடகர் மாலைத்தீவுகளுக்கான இலங்கை தூதுவராகின்றார்!!

மாலைத்தீவுகளுக்கான இலங்கையின் புதிய தூதுவராக சிரேஷ்ட பாடகர் ரோஹன பெத்தகேவை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்த அனுமதியை உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு கூடியது.

இன்றைய கூட்டத்திற்கு சிரேஷ்ட பாடகர் ரோஹன பெத்தகேவும் அழைக்கப்பட்டிருந்ததாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயர் பதவிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜோன் அமரதுங்க, தர்மலிங்கம் சித்தார்தன், எரான் விக்ரமரத்ன மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.