போராட்டத்தில் இறங்கிய சுகாதார தொண்டர்கள்!!

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களாக கடமையாற்றியவர்கள் வடக்கு மாகாண சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.


நீண்டகாலமாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றி அண்மையில் நிரந்தர நியமனத்திற்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டும் இன்றுவரை கடமை பொறுப்பேற்க விடாது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இன்றைய தினம் வட மாகாண சபைக்கு முன்னால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 387 சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை கட்டடத் தொகுதிக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் தமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையினை உரிய அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.