இலங்கை, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை கைவிடுகிறது!

எம்.சி.சி. எனப்படும் மிலேனியம் நிறுவனத்துடனான உடன்படிக்கையைக் கைவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான எம்.சி.சி. ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதற்கு 4 பேர் கொண்ட குழு அண்மையில் அமைக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த குழுவின் முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.