டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 10 ஆயிரத்து 924 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது


இதற்கமைய கொழும்பில் ஆயிரத்து 693 பேரும், திருகோணமலையில் ஆயிரத்து 278 பேரும், யாழ்ப்பணத்தில் ஆயிரத்து 61 பேரும், மட்டக்களப்பில் ஆயிரத்து 44 பேரும், கம்பஹாவில் 74 பேரும், மத்திய மாகாணத்தில் 662 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் 428 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.