மாணவர்கள் 15 பேருக்கு திடீர் சுகயீனம்!

அம்பாறை – உஹன பண்டாரதுவ பிரதேச பாடசாலை ஒன்றில் 15 மாணவர்கள் சுகயீனமுற்றுள்ளதன் காரணமாக கொனாகொல்ல – சேனரத்புர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் இன்று(13) தலைசுற்று மற்றும் வாந்தி காரணமாக இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blogger இயக்குவது.