இந்தியாவுக்கு சும்மா தான் வரேன்-டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுடன் எந்த வர்த்தக்க ஒப்பந்தமும் கையெழுத்தாகாது என தெரிவித்துள்ளார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வர இருக்கிறார். பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியா வரும் ட்ரம்ப் குஜராத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை 25 ஆம் தேதி காண செல்கிறார்.

அமெரிக்க அதிபரின் இந்திய வருகையின்போது முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவுடன் தற்போது அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் 24, 25 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மட்டுமே செய்யவுள்ளார் எனவும் வர்த்தக்க ஒப்பந்தங்கள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதோடு, அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக உறவுகளில் அதிருப்தி இருந்தாலும் இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.