மட்டக்களப்பில் விசேட நடவடிக்கையில் கஞ்சா விற்பனையாளர் கைது!

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் ஒரு கிலோ 250 கிராம் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கஞ்சா விற்பனை செய்பவரிடம் சென்று கஞ்சா வேண்டுவதைப் போல் சிவில் உடையில் வினவியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர், கஞ்சாவை எடுத்து வந்திருந்தபோது விசேட அதிரடிப்படையினர் அவரைக் கைதுசெய்ததுடன் அவரிடம் இருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அவர், பொலன்னறுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.