பெண் எனும் சக்தி!

இயற்கை உணவை இழந்தோம்
இழிவான பல நோய்களை பெற்றோம்
அழகான முகங்களை அசிங்கமாக ஆக்கினோம்
பன்னாட்டு கிரிம்களை தடவி....

பெண்களுக்கு மஞ்சள் பூசிய முகமே பல நோய்கள் தடுத்தது
நவீனமயமாக்கல் என்ற பெயரில் அழகு நிலையத்திற்கு சென்று முகத்தை கெடுத்தோம்....

பெண்களுக்கு அழகு முகத்தில் இல்லை
அழகான மனங்களில் நல்ல இதயங்களில் உள்ளது
பொதுவாக பெண்களின் முகத்தை பார்த்து பேசவேண்டும்
அதனால் தான்
பல நட்புக்கள் அழியாத கோலங்கள் மாதிரி ஓவியமாக இருக்கும்....

பெண்கள் வாழ்க்கை துணையாக வந்த பிறகு கூட சம்மதித்தால் மட்டுமே சந்தோசமாக இருக்கு முடியும்
பெண்கள் ஒன்றும் போகப் பொருள் அல்ல
அவளுக்கு ஒரு மென்மையான இதயம் உள்ளவள்....

ஆம் அவள்தான் ஒரு காலத்தில் தாய் வழி வம்சமாக இருந்தாள் அவள் முன்னே சென்றாள் நாம் அவள் பின்னே சென்றோம்
இன்று பெண்கள் ஆண்கள் பின்னால் செல்கிறாள்
அதனால் பெண் அடிமையானாள்
புதுமை படைத்திட வாருங்கள் பெண்களே
புதிய சமுதாயம் படைப்போம்....


அன்புடன்
 கோ.ரா.ரவி.பட்டு நெசவாளர்.
காஞ்சிபுரம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.