படத்தை வெளியிடுவதற்குள் உயிர் போகிறது – வசந்தபாலன்
தமிழ் சினிமாவில் தரமான படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன். அதற்கு ஒரு உதாரணம் என்றால் அவரது அங்காடித் தெரு படத்தை கூறலாம். இவர் சமீபத்தில் ஜெயில் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார், அப்படத்தை வெளியிட முடியாமல் வசந்தபாலன் திணறி வருவதாக தெரிகிறது.
அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும். ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும். இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம்.
ஆனால் எடுத்த படத்தை வெளியிட தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது என்று பதிவு செய்துள்ளார்.