'முதல் மரியாதை' நடிகர் 35 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்கிறார்!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் ‘முதல் மரியாதை’. கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தீபன் மற்றும் ரஞ்சனி இளஞ்ஜோடிகளாக நடித்திருப்பார்கள்.


இந்த நிலையில் 35 வருடங்களுக்கு பின் ‘முதல் மரியாதை’ நடிகர் தீபன் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி தற்போது கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் தீபனை தற்செயலாக விமான நிலையத்தில் பார்த்த அறிமுக இயக்குனர் ஹெமம்பர் ஜேஸ்தி தான் இயக்கவிருக்கும் ’C/O காதல்’ என்ற படத்தில் நடிக்க அவரை  அணுகியதாகவும், முதலில் மறுப்பு தெரிவித்த தீபன் அதன்பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தீபன் இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்ததாகவும், அவருடைய ஹேர் ஸ்டைல் மற்றும் மீசையை மாற்றியவுடன் அவர் இந்த படத்தின் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியதாகவும் இயக்குனர் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் தீபனுக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி சோனியா கிரி என்பவர் நடித்து வருகிறார். ஃபேஸ்புக்கில் அவரை பார்த்து இந்த படத்தில் நடிக்க அணுகியதாகவும், கேரளாவில் மாவட்ட அளவில் அரசியல் கட்சி ஒன்றில் பொறுப்பாளராக உள்ள சோனியாவும் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குனர் ஹெமம்பர் ஜேஸ்தி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.