பொதுத் தேர்தலுக்கான செலவு 5.5 – 7.5 பில்லியன் ரூபா என மதிப்பீடு!!
வரும் பொதுத் தேர்தலுக்கு 5.5 பில்லியன் ரூபா நிதி செலவாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளது.
எனினும் அதிகளவு அரசியல் கட்சிகள் போட்டியிடும் பட்சத்தில் செலவும் 7.5 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான ஒதுக்கீடுகளும் இல்லை. ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், பொதுத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“2019 நவம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2020 முதல் காலாண்டுக்கான கணக்கு அறிக்கையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியத்தை அரசு முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை.
அதனால் வரவிருக்கும் தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் எங்களுக்கு இல்லை”என்று மகிந்த தேசபிரிய குறிப்பிட்டார்
“நாளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிதி அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும்போது, நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியால் கையாளப்படும், மேலும் தேவையின் அடிப்படையில் தேவையான நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க ஜனாதிபதி ஏற்பாடுகளைச் செய்வார்” என்று அரசின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
எனினும் அதிகளவு அரசியல் கட்சிகள் போட்டியிடும் பட்சத்தில் செலவும் 7.5 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தலை நடத்துவதற்கு எந்தவிதமான ஒதுக்கீடுகளும் இல்லை. ஆனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், பொதுத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“2019 நவம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2020 முதல் காலாண்டுக்கான கணக்கு அறிக்கையில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியத்தை அரசு முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை.
அதனால் வரவிருக்கும் தேர்தல்களுக்கு நிதி ஒதுக்கீடு எதுவும் எங்களுக்கு இல்லை”என்று மகிந்த தேசபிரிய குறிப்பிட்டார்
“நாளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டவுடன், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிதி அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படும்போது, நிதி ஒதுக்கீடு ஜனாதிபதியால் கையாளப்படும், மேலும் தேவையின் அடிப்படையில் தேவையான நிதியை தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க ஜனாதிபதி ஏற்பாடுகளைச் செய்வார்” என்று அரசின் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo