ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் இல்லை- துருக்கி!

சிரியாவில் நிலைக்கொண்டுள்ள ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் தங்களுக்கு இல்லை என துருக்கி தெரிவித்துள்ளது.

சிரியா இராணுவம் மீது தொடர்ச்சியாக தாக்குதலை தொடுத்துவரும் துருக்கி, இத்தாக்குதலை நிறுத்தப் போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.


இதுகுறித்து துருக்கி பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹூலுசி ஆகார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இட்லிப் மாகாணத்தில், எங்களது படையினர் மீது சிரியா இராணுவம் கடந்த மாதம் 27ஆம் திகதி நடத்திய விமானத் தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டுப் படையினர் மீது தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

இருந்தாலும், சிரியா படையினருக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் எங்களுக்கு இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இறுதி இடமான இட்லிப் மாகாணத்தில், சிரியா மற்றும் ரஷ்யா கூட்டுப்படைகள் உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்நிலையில், தங்கள் நாட்டு படைவீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இட்லிப் மாகாணத்தில் உள்ள சிரிய படையினரின் நிலைகளை குறிவைத்து துருக்கி விமானத் தாக்குதல்கள் உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

சிரிய அரசு படையினருக்கு ரஷ்யா ஆதரவு அளித்துவருகிறது. ஆனால், போராளிகள் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது. மேலும், சிரிய எல்லைக்குள் துருக்கி தனது படைகளை குவித்து வைத்துள்ளது.

இதனால் சிரியா- ரஷ்யா படையினருக்கும், துருக்கிக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பின்னணியிலேயே துருக்கி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.