அருண் விஜய்யின் அடுத்த படம் முடிவுக்கு வந்தது!

அருண் விஜய் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய ’மாபியா’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்த நிலையில் தற்போது அவர் நடித்து நடித்து வந்த இன்னொரு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.


அருண் விஜய் நடிப்பில் ஜிஎன்ஆர் குமரவேலன் என்பவர் இயக்கிய ’சினம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.


இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் உடன் இணைந்து பணியாற்றிய இந்த ஆறு மாதங்களும் மிகவும் அற்புதமானது என்றும், மிக அழகான, அருமையான திரைக்கதையில் உருவாகி இருக்கும் படத்தில் நடித்தது தனது அதிர்ஷ்டம் என்றும், இந்த படத்தில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் தான் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அருண் விஜய் கூறியுள்ளார்.

சபீர் இசையமைக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. ’குற்றம் 23’ படத்திற்கு பின்னர் மீண்டும் போலீஸ் வேடத்தில் அருண் விஜய் இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் காளி வெங்கட் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.