விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!
24 மாவட்டங்களை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் கடற்படையின் ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது மழை குறைவடைந்துள்ளதால் டெங்கு நோய் பரவும் வீதமும் குறைவடைந்துள்ளபோதிலும் எதிர்வரும் மழைக் காலங்களில் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஒரு வாரத்திற்கு இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்றிட்டமானது, மாவட்ட ரீதியில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பரவிய பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு, பொலிஸார், கடற்படை மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேடமாக பாடசாலைகள், வீடுகள், அரச அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டு, டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் மற்றும் கடற்படையின் ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது மழை குறைவடைந்துள்ளதால் டெங்கு நோய் பரவும் வீதமும் குறைவடைந்துள்ளபோதிலும் எதிர்வரும் மழைக் காலங்களில் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஒரு வாரத்திற்கு இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்றிட்டமானது, மாவட்ட ரீதியில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பரவிய பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு, பொலிஸார், கடற்படை மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசேடமாக பாடசாலைகள், வீடுகள், அரச அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டு, டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அழிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக டெங்கு ஒழிப்புப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர மேலும் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo