கொரோனா தொற்று - கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள தகவல்!
வௌிநாட்டில் இருந்து வருகை தரும் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளது.
அதன்படி, சீனா, கொரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து கல்வி மற்றும் கல்விசார பணியாளர்களை இரண்டு வார காலத்திற்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் தற்போது 70 க்கும் அதிக நாடுகளில் கொரோனா பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த நாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வருகை தரும் தரப்பினர் இரண்டு வாரக் காலம் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கல்வி துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு கல்வி அமைச்சிடம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளது.
அதன்படி, சீனா, கொரியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து கல்வி மற்றும் கல்விசார பணியாளர்களை இரண்டு வார காலத்திற்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவன பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
உலகளாவிய ரீதியில் தற்போது 70 க்கும் அதிக நாடுகளில் கொரோனா பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த நாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு வருகை தரும் தரப்பினர் இரண்டு வாரக் காலம் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கல்வி துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு கல்வி அமைச்சிடம் மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo