விஜய் நெய்வேலியில் செய்த இன்னொரு விஷயம்!

தளபதி விஜய் நடித்து வந்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் என்பதும் அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியபோது ஏராளமாக கூடிய ரசிகர்கள் முன் அவர் செல்பி எடுத்துக் கொண்டதும், அந்த செல்பி புகைப்படம் உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து நெய்வேலி என்றாலே விஜய்யின் செல்பி என்று ஞாபகம் வரும் அளவுக்கு அந்த விஷயம் ரசிகர்கள் மனதில் பதிந்து விட்டது. இந்த நிலையில் செல்ஃபியை அடுத்து சத்தமில்லாமல் விஜய் செய்த இன்னொரு விஷயம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த கடைசி நாளில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் நெய்வேலியில் படப்பிடிப்பு நடந்த தளத்தில் மரக்கன்றுகளை நட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பை நினைவுகூறும் வகையில் இந்த மரங்கள் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.