இலங்கையில் 50 க்கும் மேற்பட்ட ஆடை தொழிற்சாலைகளுக்கு பூட்டு!!
கொரோனா வைரஸ் இலங்கையின் பொருளாதாரத்தையும் ஆட்டிப் படைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மூலப்பொருட்கள் சீனாவிலிருந்தே இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி, தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சில நிலையங்கள் இம் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், ஏனையவை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் எதிர்வரும் மே மாதம் அளவில் சுமார் ஒன்பதரைக் கோடி ரூபா வரை நஷ்டம் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அந்தவகையில் இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இங்குள்ள பிரபலமான சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களை தற்காலிகமாக மூட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு தொழில் புரிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் வாய்ப்பை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரொஹான் லக் ஷானி, தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இலங்கையின் ஆடை உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆடை உற்பத்தி நிலையங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சில நிலையங்கள் இம் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதுடன், ஏனையவை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் எதிர்வரும் மே மாதம் அளவில் சுமார் ஒன்பதரைக் கோடி ரூபா வரை நஷ்டம் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo