நாளை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்!

நாளை செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சுகாதார பணிமனைக்கு உற்பட்ட திருகோணமலை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.


நாளை காலை 7.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரையிலான காலப்பகுதில் சுகவீனப்போராட்டம் முன்னெடுக்கப்படும் என திருகோணமலை மாவட்ட பொதுசுகாதார பரிசோதகர்களின் பொறுப்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்துக்குள் இடம் பெரும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெரும் இடமாற்றக்கொள்கைக்கு எதிராக இடம்மாற்றங்கள் இடம்பெறுவதை தடைசெய்யக்கோரியே நாளை சுகவீனப்போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலையில் உள்ள சுமார் 51 பொதுசுகாதார பரிசோதகர்கள் சுகவீனப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.