உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏழு பேரை தேடும் சி.ஐ.டி!!

கடந்தாண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பிரதான சுத்திரதாரியான, பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்கும் அவரது தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்புக்கும் நிதியுதவி அளித்து வந்த முக்கிய நபர்கள் 7 பேரைத் தேடி சி.ஐ.டி. விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


இதுவரை விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி இந்த சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்தவகையில் சட்டத்தரணி ஒருவர், பொறியியளாளர் ஒருவர், இரு வைத்தியர்கள், இரு வாகன விற்பனையாளர்கள் இந்த 7 பேரில் உள்ளடங்குகின்றதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த 7 பேரும் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக சந்தேகித்திருக்கும் சி.ஐ.டி.யினர், அவர்களில் சிலர் அவுஸ்திரேலியா, துருக்கி மற்றும் அமெரிக்கவில் இருப்பது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அதனை மையப்படுத்தி இன்டர்போல் மற்றும் சர்வதேச உளவுத் துறைகளின் உதவியோடு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.