வன்னி தேர்தல் தொகுதியில் 353 வாக்களிப்பு நிலையங்கள்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியில் ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.


வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய 3 தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் 2இலட்சத்து 87ஆயிரத்து 13 பேர் வாக்களிக்களிப்பதற்காக 353 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 19ஆயிரத்து 811 பேர் வாக்களிப்பதற்காக 141 வாக்களிப்பு நிலையங்களும் மன்னார் மாவட்டத்தில் 88ஆயிரத்து 842 பேர் வாக்களிப்பதற்காக 76 வாக்களிப்பு நிலையங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 78 ஆயிரத்து 360 பேர் வாக்களிப்பதற்காக 136 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக இதுவரை 3 சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.