வில்லன் ஆனார் கவுதம் மேனன்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் ’கோலிசோடா 2’ உட்பட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது என்பதும் அவரது நடிப்பும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் அவர் படங்களை இயக்குவது மட்டுமன்றி அதிக படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’செல்பி’. இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கி வருகிறார். எஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெறும் மோசடிகளை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும் என்றும், இந்த படத்தில் கவுதம் மேனன் ஒரு கல்லூரி நிர்வாகியாக நடித்து வருகிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக வர்ஷா பொம்மலு நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மார்ச் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கவுதம் மேனன் வில்லனாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.