ஹோட்டல் ஊழியர் கொலை விவகாரம்- மேலும் அறுவர் கைது!

நீர்கொழும்பு – பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலின் ஊழியர் ஒருவர், நேற்று கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் ஆறு பேர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


குறித்த 6 சந்தேக நபர்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தமையினை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் ஏற்கனவே 18 வயதுடைய நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவரை கைது  செய்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது மொத்தமாக 07 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும் அவர்களை நாளை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த மோத லை தொடர்ந்து உணவகத்தின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர் என்றும் அவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கெக்கிராவ பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.