வெளியானது சுமந்திரன் - வித்தியாதரனின் இரகசிய டீல்!

சுமந்திரனின் துரோகத்திற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல வித்தியாதரனின் துரோகம்.


ஜனநாயக போராளிகள் கட்சி தொடக்கம் அண்மையில் மகிந்தவை கூப்பிட்டு தனது அகவை நாளை கொண்டாடியது வரை அவரது தமிழர் விரோத / தமிழீழ எதிர் நடவடிக்கைகள் பட்டியல் இன்று முழுவதும் இருந்து எழுதினாலும் எழுதித் தீராது.

தலைவர் சொன்னார் 'விழிப்புத்தான் விடுதலைக்கு முதற் படி"என்று.

இருந்தும் நம்மவர் பலர் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

சுமந்திரனுக்கும் அவருக்கும் உள்ளது பங்காளிப் பிரச்சினை.

இதைக் காவி நம்மைத் தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம் என பரனி என்பவர் முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுமந்திரனைப் பற்றி நேற்று முன்தினம் வரை கடுமையான விமர்சனங்களை முன்வைத்த மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரன் ஏன் இப்படி திடீர் பல்டி! இதற்கும் ஏதாவது கதை எழுதி வைத்திருப்பார்...

யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களை தோற்கடிக்க சுமந்திரனால் களமிறக்கப் பட்ட அணியின் அங்குராப்பன நிகழ்வே நேற்று முன்தினம் இடம் பெற்றது.

வரிக்கு வரி விடுதலைப்புலிகளின் தியாகத்தை வீரமாக கூறும் வித்தியாதரன் தரம் தாழ்ந்து சுமந்திரனிற்கு வெள்ளையடிக்க நினைப்பது எவ்வளவு வேதனை என போராட்டத்தில் ஈடுபட்டு விழுப்புண் அடைந்த முன்னாள் போராளிகள் கூறுகின்றார்கள்.

வித்தியாதரனின் ஊடக வாழ்க்கையின் கடைசி காலத்தில் சுமந்திரனிற்கு சேவகம் செய்து தான் பிழைப்பு நடாத்தும் நிலை வந்து விட்டதை என்னி விடுதலைப் போராட்டமே வெட்கி தலை குனிகிறது.

இனி வரும் நாட்களில் நான் நடு நிலை ஊடகவியலாளர் என மார்பு தட்டும் கருத்தை நீக்கி விட்டு சுமந்திரனின் ஊடகச் செயலாளர், அல்லது 2020ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரனின் பிரச்சார பீரங்கி என அடை மொழி கொள்வது சாலச் சிறந்தது.

யாருக்கும் சுமந்திரன் மீது யாருக்கும் வெறுப்பல்ல யாரையும் சுமந்திரன் மதிப்பதில்லை! அது வித்தியாதரன் ஆகிய உங்களிற்கு நன்கு தெரியும் .

இப்படி மிதிப்பும் மரியாதையுடனும் இன்று வரை இருந்து வந்த நீங்கள் கேள்வி பதில் நிகழ்வு என மேடை ஏறி சுமந்திரன் எழுதித் தந்த வினாக்களை உங்களின் வார்த்தைகளால் வினாவாக்கி கோட்டு விட்டு அதற்கு இது சுயாதீன் ஊடகவியலாளனாக நான் கேட்கிறேன் என்பதை இனி வரும் நாட்களில் கேட்காதீர்கள்...! சுமந்திரன் எழுதி தந்து கேட்கிறேன் என அதையும் வெளிப்படையாக கூறுங்கள் நீங்கள் தான் தைரியமான ஊடகவியலாளரே...!

இம் முறை தேர்தலில் கூட்டமைப்பில் ஒரு ஆசனம் கிடைத்தாலும் அது சுமந்திரன் மட்டுமே இருக்க வேண்டும் எனும் தகவல் பிரச்சார அணிக்கு கொடுக்கப் பட்ட தகவல்.

அது மட்டு மல்லாது இம்முறை எதிர் முனையில் உள்ள கட்சிகளிற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு மாறாக தமிழரசுக் கட்சியில் உள்ள முன்னணி தலைவர்களை தோற்கடிக்க வைப்பதே முதல் நோக்கம் இதனை தமிழரசுக் கட்சியின் அடி மட்ட தொண்டர்கள் உணர்வார்களா....
Blogger இயக்குவது.