மட்டு.போதனா வைத்தியசாலை பகுதியில் குழப்பம்!
கொரோனா நோயாளர்கள் சிலரைப் பரிசோதனை நிமித்தம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுவர இருப்பதாகப் பரவிய செய்தியை அடுத்து புளியந்தீவுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் வைத்தியாசலைக்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) பாரிய எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.
புணானை பல்கலைக்கழகத்தில் உள்ள சிலர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட இருப்பதாக மக்கள் மத்தியில் பரவலாகச் செய்திகள் பரவியமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் மக்கள் வீதியில் நின்றவாறு தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர். பின்னர் மேற்படி செயற்பாடு மாற்றம் செய்யப்பட்டமை அறிந்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதன்போது குறித்த பகுதியில் பொலிஸ், பாதுகாப்புப் பிரிவினர் குவிக்கப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டப் பிரதேசமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
புணானை பல்கலைக்கழகத்தில் உள்ள சிலர் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட இருப்பதாக மக்கள் மத்தியில் பரவலாகச் செய்திகள் பரவியமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் மக்கள் வீதியில் நின்றவாறு தங்கள் எதிர்ப்பினை வெளியிட்டனர். பின்னர் மேற்படி செயற்பாடு மாற்றம் செய்யப்பட்டமை அறிந்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதன்போது குறித்த பகுதியில் பொலிஸ், பாதுகாப்புப் பிரிவினர் குவிக்கப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டப் பிரதேசமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo