யாழில் முதலாவது வேட்பு மனுத் தாக்கல்!!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.


எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது.

அதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு முதலாவது வேட்பு மனுவினை ஜனசெத பெரமுன சார்பில் பத்ர முல்லை சில ரத்தின தேரர் தாக்கல் செய்தார்.

இன்று முதல் 19ஆம் திகதி வரை வேட்புமனுத் தாக்கல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலதிக பாதுகாப்பு கருதி பொலிஸாரின் மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.