கொரோனா வைரஸ் - போலந்தில் முதல் உயிரிழப்பு பதிவானது!

கொரோனா வைரஸ் எனும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு போலந்தில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டின் மேற்கு நகரமான போஸ்னானின் உதவி மேயர் அறிவித்துள்ளார்.


57 வயதான இந்த ஆசிரியை ஒருவர் சமீபத்தில் நிமோனியா காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் செயற்கை கோமாவில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக போஸ்னான் உதவி மேயர் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.

போலந்தில் மேலும் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலந்து ஜனாதிபதி அந்த்ரேய் டூடா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “எதைக்கண்டு கடந்த சில நாட்களாக அஞ்சினோமோ அது நடந்து விட்டது. நம் நாட்டில் கொரோனாவுக்கு முதல் நபர் உயிரைப் பறிகொடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.