பிக்கு ஒருவர் உட்பட இருவருக்கு யாழில் கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் அடையாளம் காணப்பட்ட போதும் சிகிச்சையிலிருந்து அவர்கள் தப்பிவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பரபரப்பான செய்தி ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.


எனினும் இந்தத் தகவலை யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஊர்ஜிதம் செய்யவில்லை.

இதேவேளை சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் போலி செய்திகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பொலிஸ் தலமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் பொலிசார் கோரியுள்ளனர்.

இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்ற நிலையில் பொலிஸ் தலமையகம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.