கொரோனா தொற்று- புதிய அறிக்கை வெளியானது!

இலங்கையில் கொரோன வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.


இத்தாலியில் இருந்து கடந்த 7ஆம் திகதி இலங்கை வந்த 56 வயதுடைய பெண் ஒருவருக்கும் 17 வயதுடைய யுவதி ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து வந்த கொரோனா தொற்றுக்குள்ளான 52 வயதான நபரின் உறவினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 103 பேர் 17 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.