இஸ்லாமியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

மறு அறிவித்தல் வரும் வரை இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் அனைத்து தொழுகைகளையும் நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை அறிவுறுத்தியுள்ளது.


நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இலங்கையிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்த தொற்றுக்கு இதுவரையில் இலங்கையில் 10 பேர் இலக்காகியுள்ளனர்.

இந்நிலையில், மக்களின் பாதுகாப்புக் கருதி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் இந்துக்களை கோயிலுக்கு செல்வதைத் தவிர்த்து வீட்டிலிருந்தே பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு இந்து கலாசார அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

அது தவிர கிறிஸ்தவ மக்களையும் வீட்டிலிருந்தே ஆராதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ஞாயிறு ஆராதனைகள் இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டிருந்தமை குறப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.