தேவையென்றால் அரச விடுமுறை நீடிக்கப்படும்- அரச வர்த்தமானி!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தோற்று அச்சம் குறித்து மக்கள் மத்தியில் குழப்பநிலை நீடிக்கின்றது.


இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) பொது விடுமுறை தினமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேவை ஏற்படும்பட்சத்தில் அரச விடுமுறை நீடிக்கப்படலாம் என அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் விடுத்துள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் அங்கீகாரத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸார் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.