விசேட பாதுகாப்பில் தலதா மாளிகை!

தலதா மாளிகைக்கு வரும் உள்நாட்டு,வெளிநாட்டவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இத்தகவலை, தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க ​தேரர் தெரிவித்துள்ளார்.

அதன்படி முதற் காரணியாக, மாளிகைக்குள் வருவோர் முகம்,கை,கால் கழுவிட்டு தூய்மையாக உள்வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் , விஷக்கிருமிகளை அழிப்பதற்கான மருந்து வகையொன்றை பெற்றுக்கொடுத்த பின்னர் உள்நுழைய முடியுமெனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் விஷக் கிருமிகளை ஒழிப்பதற்காக மேறகொள்ளப்பட்டுள்ள சில ​பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மாளிகைக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி அந்த சூழலில் நடமாட முடியுமெனவும் தியவடன நிலமே பிரதீப் நிலங்க ​தேரர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.