வெளிநாட்டவா்களைத் தேடி யாழ்.நகர் ஹோட்டல்களில் விசேட சோதனை!

இலங்கைக்கு வந்து தனிமைப்படுத்தல் சோதனைக்கு உட்படாமல் ஹோட்டல்களில் தங்கியுள்ள வெளிநாட்டவா்களை அடையாளம் காணும் நடவடிக்கையினை யாழ்.மாநகரசபையினா் ஆரம்பித்திருக்கின்றனா்.


இந்த நடவடிக்கையானது நேற்று மாலை அதிரடியாக ஆரம்பிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து வரும்போது கொரொனா தடுப்பு மையங்களிற்கு செல்லாது நேரடியாக வந்தவர்களை இனம் கண்டு அவர்களை படையினரின் பொறுப்பில் உள்ள பரிசோதனை மையங்களிற்கு அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் , சுகாதார வைத்திய அதிகாரி , பொலிசார் மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆகியோரிற்கிடையிலான விசேட சந்திப்பின் பின்னர் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக முதல் கட்டமாக யாழ் . நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதிகள், தங்ககங்கள் என்பனவற்றில் திடீர் சோதனை இடம்பெற்றது.

அதன்படி கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படும் நாடுகளில் இருந்து இம் மாதம் வருகை தந்த உள்ளூர் வெளியூர் பயணிகள் இனம்கானும் நடவடிக்கை இடம்பெற்றது.

இந்த சோதனை நடவடிக்கையில் நேற்றையதினம் ஒரே தினத்தில் 7 விடுதிகளும் 4 தங்ககங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.