பரீட்சை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம்!!


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்தார்.


மேலும் உயர் தரப் பரீட்சையை நவம்பர் மாதம் ஒத்திவைக்க எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் போலியானது என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

திட்டமிட்டவாறு க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளானது ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் என்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.