இத்தாலியில் இருந்து நாடு திரும்பியவரால் ஹட்டனில் பதற்றம்!!

இத்தாலியிலிருந்து நாட்டிற்கு வந்த நபர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு செல்லாமல் ஹட்டன் – டன்பாரில் தங்கியிருப்பதாக வெளியாக தகவலை அடுத்து அங்கு இன்று பிற்பகல் பதற்றநிலை ஏற்பட்டதாக தெரியவருகின்றது.


இதனையடுத்து அங்கு விரைந்த ஹட்டன் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 12 வருடங்களாக இத்தாலியில் தொழில்புரிந்த நிலையில் குறித்த நபர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந் நிலையில், அவரை விசாரணை செய்த பொலிஸார், பொது சுகாதார அதிகாரிகளையும் அங்கு வரவழைத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவரை வீட்டிலிருந்தே மருத்துவ சோதனைகளை செய்யும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை இவ்வாறு கொரோனா தொற்று சோதனைக்கு செல்லாமல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பலரும் ஹட்டனில் உள்ள தங்களது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதாகவும், அவர்களைத் தேடி விசாரணை இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.