கொரோனா வைரஸ் தாக்கம் - முக்கிய பொறுப்பில் இராணுவத் தளபதி நியமனம்!!

கொரோனா வைரஸை (கொவிட் 19) தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலக்கம் 1090 ஸ்ரீ ஜயவர்தனபுர, இராஜகிரிய என்ற முகவரியில் கொரோனா வைரஸை (கொவிட் 19) தடுப்பதற்கான தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 28 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவே குறித்த தேசிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.