பொலன்னறுவையில் IDH வைத்தியசாலைக்கு இணையான பிரிவொன்று ஸ்தாபிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரை கண்காணிப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் IDH வைத்தியசாலைக்கு இணையான பிரிவொன்றை பொலன்னறுவையில் ஸ்தாபித்துள்ளதாக இராணுவத்தளபதி, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


குறித்த பிரிவிற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் நோயாளர்களை அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என இராணுவத்தளபதி கூறியுள்ளார்.

IDH வைத்தியசாலையில் மாத்திரமே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு, பொலன்னறுவையிலுள்ள கண்காணிப்பு மத்திய நிலையங்களிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதால், IDH போன்றதொரு பிரிவை பொலன்னறுவையில் ஸ்தாபிக்குமாறு நேற்று முன்தினம் இலங்கை இராணுவத்திற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாகவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாகவும் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவின் ஆலோசனையுடன், பொலன்னறுவை வைத்தியசாலையின் ஆலோசனையின் அடிப்படையிலும் நோயாளர்களை அங்கு அனுமதிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.