மலையாள எழுத்தாளர்களுடன் தனுஷ் பட இயக்குனர்!!

அசுரன் மற்றும் பட்டாஸ்’ ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை அடுத்து தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது தனுஷ் பாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் அவர், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க உள்ளார்’ என்பதும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே.


இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷின் 43வது படத்தில் பிரபல மலையாள எழுத்தாளர்களான சர்ஃபு மற்றும் சுகாஸ் ஆகியோர் இணைந்தனர் என்பதையும் இவர்கள் ஏற்கனவே மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘வர்தன்’ மற்றும் ’வைரஸ்’ ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ‘தனுஷ் 43’ படத்தின் திரைக்கதையை எழுத்தாளர்கள் சர்ஃபு மற்றும் சுகாஸ் ஆகியோர்களுடன் இணைந்து எழுத தொடங்கிவிட்டதாக சற்றுமுன் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.