சதொச விற்பனை நிலையத்தில் திரண்ட மக்கள்!

கூட்டமாக இருக்க வேண்டாம் என்கிற அரசாங்கத்தின் அறிவிப்பை மீறி பருப்பு, டின் மீன் ஆகியவற்றை பெறுவதற்கு மக்கள் கூட்டமாக நின்ற சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.


ஜனாதிபதி நேற்று வழங்கிய நிவாரண பொருட்களை பெறுவதற்கே மக்கள் இவ்வாரும் கூடியிருந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

டின் மீன் மற்றும் பருப்பு என்பவற்றின் விலைகளை குறைப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வழங்கினார்.

இதனை அடுத்து அவற்றை கொள்வனவு செய்ய ஹட்டன் சதொச விற்பனை நிலையத்தில் மக்கள் இன்று காலை அலையாகத் திரண்டனர்.

கொரோனா வைரஸ் பரவுவதால் கூட்டமாக கூடுதல் தவிர்க்க வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியும் அண்மையில் ஊடக சந்திப்பை நடத்தி அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதியும் இதனை வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் அறிவிப்புகளை மீறி மக்கள் கூட்டமாக நின்று டின் மீன் மற்றும் பருப்பு என்பவற்றை கொள்வனவு செய்ததாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.