கொரோனா - தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்ட அமிதாப்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலக மக்கள் அனைவரையும் வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருக்குமாறும், அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்


இதனை அடுத்து சாதாரண குடிமக்கள் முதல் முக்கிய விவிஐபிக்கள் வரை கடந்த சில நாட்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். மேலும் மும்பை மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

நடிகர் அமிதாப்பச்சன் மட்டுமன்றி பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டு வீட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கொரோன வைரஸின் பாதிப்பை பாப்பை உணர்ந்து, தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் சுயகட்டுப்பாட்டுடன் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.