லண்டனில் இருந்து நாடு திரும்பிய பெண்ணுக்கு கொரோனா வைரஸ்!!

லண்டன் சென்று திரும்பிய இந்திய பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதால், அந்நாட்டில் கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரின் உயிரை எடுத்துள்ளது.

தற்போது வரை இந்த நோய் காரணமாக 219,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,970 உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த நோய் தற்போது இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாட்டில் மட்டும் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக இந்திய அரசு கொரோனா பரவலை தடுப்பதற்காக, வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதையடுத்த அவருடைய பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சண்டிகர் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த பெண்ணின் புகைப்படம், அவர் லண்டனில் எங்கு யாரை பார்த்து வந்தார்? என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.