கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த நடிகை த்ரிஷா!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை த்ரிஷா, கொரோனா விழிப்புணர்வு குறித்தும், கொரோனா பரவாமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


கொரோனா வைரஸ் நம்மை பாதிக்காமல் இருக்க தடுத்துக் கொள்ள முடியும். அதற்கு நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்

உங்களுக்கு இருமல் அல்லது தும்மல் வந்தால் உடனே கர்சீப் அல்லது டிஷ்யூ பேப்பர் எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும். பயன்படுத்தப்பட்ட டிஷ்யூ பேப்பர்களை குப்பைத் தொட்டியில் போட்டு மூட வேண்டும்

உங்கள் கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தேவையில்லாமல் தொடக்கூடாது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்

அதிக கூட்டமாக இருக்கும் இடத்தில் இருப்பதை தவிர்க்கவும். உங்களுக்கு இருமல் அல்லது காய்ச்சல் இருந்தால் அல்லது மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும். மேலும் உடனே உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் சுகாதார மையத்தை அல்லது மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும். அப்போது முக கவசம் போட்டுக் கொள்ள வேண்டும்

மேலும் விவரங்கள் தமிழ்நாடு பொது சுகாதார மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகை திரிஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.