வடக்கு மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!

வடக்கு மாகாணத்தில் 24ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊடரங்குச் சட்டம் மீண்டும் அன்றைய தினமே 2 மணிக்கு ஊரடங்கு அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், வடக்கு மாவட்டங்களில் உள்ளவர்கள் அடுத்தடுத்த மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், அரியாலையில் தேவாலய ஆராதனையில் ஈடுபட்ட சுவிஸ் போதகருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருந்தததையடுத்து அவருடன் பழகியவர்களுக்கும் கொரோனொ தொற்று இருக்கலாமென்று சந்தேகம் வெளியிடப்பட்டிருந்ததது.

இந்நிலையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆராதனைகளில் கலந்துகொண்டவர்களை அடையாளம்காணும் பொருட்டு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவ குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.