ஒரு வாரத்திற்கு தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த இந்திய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட வேண்டிய மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை மாலை முதல் வரும் 31ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விடுத்துள்ள நிலையில் அத்தியவசியத் துறைகள் தவிர்த்து ஏனைய அலுவலங்கள் இயங்காது எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.